அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட சிறிய கனரக வாகனம்

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை .- அவினாசி நெடுஞ்சாலையானது, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகத் தான் தொடங்குகிறது. பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று ரயில்கள் செல்லும் பாலத்தின் அடியே வாகனத்தின் மேற்கூரை சிக்கியது. 

இதனால், வாகனத்தை நகர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்தனர். பிறகு, வாகனத்தின் மேற்பகுதி பாலத்தில் சிக்கியதால், உடனடியாக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், நீண்ட முயற்சிக்குப் பிறகு, வாகனத்தின் பகுதியை மேம்பாலத்தில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...