காங்கிரசிடம் கம்யூனிஸ்ட் எப்போதும் சரணடையாது : கோவையில் சுதாகர் ரெட்டி பேட்டி

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளது. அதேசமயம், அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. 

பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கடிதம் கைப்பற்றப்பட்டதில், முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பின்மை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.,வை வீழ்த்துவோம். ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமை எங்களுக்கு தேவையில்லை. தலைவர்களை விட கொள்கைகளே மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிடம் சரணடையாது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அ.தி.மு.க., அரசு பா.ஜ.க.,வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இணை செயலாளர்களாக தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாம் என்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் உள்ளவர்களைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...