2018-19-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.


நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, மேல்நிலைக் கல்வியான பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொழி 2-ம் தாளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், கல்வியாண்டின் துவக்கத்திலேயே பிளஸ்2, பிளஸ்1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிளஸ்2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.04.19 அன்று வெளியிடப்படும். பிளஸ்1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 08.05.19 அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.19 முதல் 29.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும். 

மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும், என்றார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...