ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சோசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

எங்கள் தொழிற்சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12 அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அப்போது, பெட்ரோல் விலை ரூ.48- ஆகவும், டீசல் விலை ரூ.37- ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக உயர்ந்துவிட்டது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35-ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.18-ஆகவும் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், அரசு கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...