கோவை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த வட்டாரத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குரங்கு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அந்த அருவியில் குளிக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மழை காரணமாக இன்று வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த வட்டாரத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குரங்கு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அந்த அருவியில் குளிக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மழை காரணமாக இன்று வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.