மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறப்பு

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது. 

எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...