மேட்டுப்பாளையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட சுற்றித்திரியும் காட்டுயானை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு உடலில் பலத்த காயங்களோடு காட்டு யானை ஒன்று பலத்த பிளிறல் சப்தத்தோடு சுற்றி வருவதைக் கண்ட மக்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனிடையே, அங்குள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காயம்பட்ட யானை வலியால் ஏற்பட்ட கோபம் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தை சாய்த்தது. மேலும், ஆக்ரோஷத்தோடு அங்கும் இங்கும் பிளிறியபடி ஓடியது. இதனால் அத்தோட்டப் பகுதி முழுவதுமே யானையின் ரத்தக்கரையாக காட்சியளிக்கின்றது. 



தகவல் கிடைத்து வனத்துறையினர் வரும் முன்பே காயம் பட்ட யானை அங்குள்ள தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களை கடந்து அருகில் உள்ள புதர்க்காட்டு பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து, இன்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு யானையின் ரத்த சிதறல்களை பின்தொடர்ந்து சென்றனர். 

இதன் மூலம் அந்த யானை, அருகில் உள்ள நெல்லிமலையடிவார வனப்பகுதிக்குள் யானை சென்றுள்ளதை உறுதிசெய்துள்ள வனத்துறையினர், உடலில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதால் வேதனையில் தவிக்கும் யானையின் அருகே செல்வது ஆபத்து என்பதால் தற்போது வரை அதன் நடமாட்டத்தை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

யானைகளின் இனப்பெருக்க கால நேரங்களில் பெரிய யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வது வழக்கம் என்பதால், இதன் காரணமாக இந்த யானை காயமடைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என யானையின் காயங்களை பரிசோதித்த பின்னரே தெரிய வரும் என்கின்றனர் வனத்துறையினர். 

காயமடைந்து உயிருக்குப் போராடும் யானைக்கு சிகிச்சை அளிக்க இயலுமா? என முயற்சி மேற்கொள்ளும் வனத்துறையினர், இந்த யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...