போளுவாம்பட்டி அருகே குடிபோதையில் தாறுமாறாக ஓட்டியக் கார் மோதி 2 பேர் படுகாயம்

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போளுவாம்பட்டி பகுதியில் வெள்ளை நிற ஸ்விப்ட் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. குமரன் கல்யாண மண்டபம் அருகே இந்த கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தோஷ் ராஜ் என்பவரும், அவரது தாயும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் சென்றது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காரை விரட்டிச் சென்றனர். இதையறிந்து, மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாது என்று அறிந்த ஓட்டுநர் உள்பட அதில் பயணித்தவர்கள், காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கு சென்ற அப்பகுதியினர், காரை சோதனை செய்ததில், உள்ளே ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தைக் கண்டனர். எனவே, காரில் இருந்த 4 அல்லது 5 இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.



இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...