பில்லூர் அணை திறப்பால் வெள்ளப் பெருக்கு: பவானி ஆற்றின் கரையோர பாதுகாப்பு குறித்து கோவை ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை நிரம்பியது. இதனால், பாதுகாப்பு கருதி அணை நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிறுமுகை, ஒடந்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், நெல்லித்துரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வெள்ளபெருக்கு காரணமாக வருவாய்த்துறை எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஓடந்துரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரவு முழுவதும் தண்ணீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தொடர்ந்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...