சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய ராமலிங்கம் நகர் மக்கள்

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கடந்த 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அன்றைய தினமே, அந்த பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்றும் வகையில் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

தொடர்ந்து, சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கென இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இதில் கோயம்புத்தூர் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ஜனார்த்தனன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுப்புறத்தில் மரம் நடுவதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டனர்.



கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...