கனமழையால் நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை: விடுக்கப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது.

நேற்றிரவு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு பன்னிரெண்டாயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மொத்தம் 100 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியை கடந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியாக தற்போது வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அணையின் தற்போதைய நீர்வரத்தான ஒன்பதாயிரம் கன அடி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை வரையிலான ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



பில்லூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் இதன் கிளையாறுகளான கல்லாறு, காந்தையாறு போன்ற காட்டாறுகளிலும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...