திருப்பூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது. 



இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது. 



அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...