கடும் மழையிலும் நடைபெற்றது புலிகள் கணக்கெடுப்பு

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



நேற்று காலை 6.30 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்தனர். அவர்கள் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் தங்களது பணியினை தொடர்ந்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜி.பி.எஸ்., கருவி மூலம் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மற்றும் நாளை ஊனுண்ணிகளின் கணக்கெடுப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள். இதில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு நாய் ஆகிய விலங்குகள் அடக்கம்.



சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ஏழு வனச் சரகங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றது." என்றனர்.

வனப்பகுதிகளில் நேற்று கடுமையான மழைப் பொழிவு இருந்த போதிலும், கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...