வால்பாறையில் கன மழை தமிழக கேரள சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

மழை காரணமாக வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிப்படைந்தது.



சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. மேலும், ஏராளமான மண் மற்றும் கற்கள் சாலையின் மேல் விழுந்து சாலையை மூடின.



வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. இருப்பினும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதே போல் சோலையார் அணைக்குச் செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் சோலையார் அணை பகுதி பல மணி நேரம் வால்பாறையிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி பி மூலம் சாலையில் கிடக்கும் மண் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...