நீலகிரியில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 30 சதவீதம் மழைப் பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும். இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையால் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் அணைகளான முக்குறுத்தி, அவலாஞ்சி, எமரால்டு, போத்தி, கெத்தை, அப்பர் பவானி, காமராஜர் அணை, பைக்காரா அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படும்.

இதேபோல, குடிநீர் ஆதாரங்களான மார்லி மந்து, டைகர் ஹில், பார்சன்ஸ்வேலி, கீழ் மற்றும் மேல் கோடப்மந்து, கீழ் மற்றும் தொட்ட பெட்டா உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால், நகரில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படும் நிலையில், இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தின் ஒராண்டுக்கான சராசரி மழையளவு 1.325 மி.மீ., மழையாகும். இதில், தென்மேற்கு பருவ மழை மட்டும் 630 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை 345 மி.மீ., மற்றவை 350 மி.மீ., மழையின் அளவாக உள்ளது.



கடந்த 2014-ம் ஆண்டு 1,392.5 மி.மீ., மழையும், 2015-ம் ஆண்டு 1,400.3 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதன்மூலம், இரு ஆண்டுகளிலும் தலா 5 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு 613.8 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது 53 சதவீதம் குறைவாகும். கடந்தாண்டு 1,324.9 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சராசரி மழைப் பதிவாகும். இந்தாண்டு தற்போது வரை 400 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், 30 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது, என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...