மசினகுடியில் உடும்பை வேட்டையாடிய இருவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.



சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...