அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள்: அரசின் அறிவிப்பிற்கு வரவேற்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கென தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து கோவையில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் கனகராஜ் கூறியதாவது :- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன் தமிழக அரசு சார்பாக சென்னையில் சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இங்கு பயிற்சி பெற்ற பலர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, கடந்த 8 வருடங்களில் அதிக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய சாதனை தமிழகத்திற்கு உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்குவதால், தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்றார்.

குறிப்பாக, வழக்கமான பள்ளி ஆசிரியர்களை வைத்து தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி கொடுக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...