காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளை மரத்தின் கீழ் கட்ட வேண்டாம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியசாகவும் இரவு நேர வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. கோவையில் கோடை மழை 130 மி.மீ., எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. 19 முதல் 24 கி.மீ., வரை வீசவும் வாய்ப்புள்ளது. இது ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக வீசாது, அவ்வப்போது சற்று குறைந்தும் காணப்படும். குறிப்பாக, வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், சிதிலமடைந்த மரங்களை, மரக் கிளைகளை முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது. காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் 

அதேபோன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். கரும்புகளுக்குக் கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது, திருப்பூரில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...