வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.

கோவையை அடுத்த வால்பாறையில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான பணிகொடை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தேயிலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 309 என வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 116 பேருக்கு ரூ. 54,36,261 பணிக்கொடை வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

தொழிலாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. அவர்களது தேவைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்," என்றார். பின்னர் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைக்கான காசோலையை தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...