குவைத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் கோவை வீராங்கனை சாம்பியன்

கோவை: குவைத் நாட்டில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சரண்யா தேவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கோவை: குவைத் நாட்டில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சரண்யா தேவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சரண்யா தேவி. குவைத்தில் கணவருடன் வசித்து வரும் சரண்யா தேவி, அங்கு இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். கோவையில் கல்லூரி படிக்கும் போதே காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் ரைப்பிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற அவர், குவைத்திற்கு சென்று பிறகு, அங்கும் ரைப்பிள் கிளப்பிலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியைத் தொடர்ந்து வந்தார். 



இந்நிலையில், குவைத் நாட்டில் அல் மெய்தான் மைதானத்தில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், அவர் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சரண்யா தேவி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அங்குள்ள உள்ளூர் வீரர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். கோவையில் பயிற்சி பெற்ற போது கிடைக்காத வெற்றி, தனக்கு குவைத் நாட்டில் கிடைத்து இருப்பதாகவும், கோவையில் பெற்ற பயிற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என சரண்யா தேவி கூறுகிறார். 

தங்களது மகள் குவைத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் கோவையில் உள்ள சரண்யா தேவியின் பெற்றோர். "கல்லூரியில் படிக்கும் போதே சரண்யா துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றார். திருமணத்திற்குப் பின்னர் குவைத் சென்றும் பயிற்சியைத் தொடர்ந்தார்," இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். 



தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் குவைத் நாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவிக்கும் சரண்யாவின் தந்தை, குவைத் நாட்டில் உள்ள தமிழ் வம்சாவளி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் பணியையும் செய்து வருவதாகப் பெருமையுடன் தெரிவிக்கின்றார்.

குவைத் நாட்டில் நடைபெறும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், கோவையைச் சேர்ந்த பெண் குவைத் நாட்டு வீர்ரர்களுடன் போட்டியிட்டு, சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது குவைத் வாழ் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...