உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம்

நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

அவரது கல்லரை புனித ஸ்டீபன் பேராலய வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த கல்லறையில் தாவரவியல் பூங்காவைச் சார்ந்த ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து நாட்டின் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் பயிற்சியாளராக இருந்த மெக் ஐவர் கடந்த 1847-ம் ஆண்டு உதகமண்டலம் வந்து 22 ஏக்கரில் தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தினார். 



இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தாவரங்கள், 150-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் குளிர் மற்றும் மித தட்ப வெப்ப நிலையிலுள்ள பல்வேறு புதர்கள் அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல தரப்பட்ட பூக்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியவர் மெக் ஐவர். 

நீலகிரியின் இன்றைய வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மெக் ஐவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...