கோவை: பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் தனியார் பள்ளிக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் பலியானார்.
கோவை: பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் தனியார் பள்ளிக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் பலியானார்.

அந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த பள்ளிக் கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பலியானார். மேலும், எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

அவர்கள் மீட்ட தீயணைப்புத் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.