பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இன்று நடக்கவிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

கோவை: ஊதியத்தை முறைப்படுத்தி வழங்க வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


கோவை: ஊதியத்தை முறைப்படுத்தி வழங்க வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்கிய 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சம்பள உயர்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் மீதான பேச்சுவார்த்தை டி.சி.எல்., முன்னிலையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பெர்பார்மன்ஸ் முறை கைவிடப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் (0% -9%) மொத்த சம்பளத்தில் 10% வழங்கப்படும், அதற்கான கொடுபடா தொகை (Arrears) 1.4.2017 முதல் 31.3.2018 வரை ஜூன் மாத சம்பளத்துடன் தரப்படும் என முடிவு செய்யப்பட்டது. 

மேலும், 2018-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, முடிவு செய்வதாகவும் நிர்வாக தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில், 1947 தொழில் தகராறு சட்டம் பிரிவு 12(3)படி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.



இதுகுறித்து 108 ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் கூறியதாவது :- தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் நலன் கருதி எங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கி உள்ளோம். ஆனால், 10 சதவீத உயர்வு என்பது போதாதுதான். அடுத்த கட்டமாக தொழிலாளர்களின் நலன் கருதி நிர்வாகம் நியாயமான சம்பளத்தை தர வேண்டும், எனத் தெரிவித்தார்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...