கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காட்டூர் சாலையில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜான் கோ பிடல். இவரை தொழில் விஷயமாக கரிகாலன் என்பவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தொழிலதிபர் பிடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இரண்டு கார்களில் வந்த கும்பல் அலுவலகத்தின் முன் உள்ள கண்ணாடி கதவை உடைத்தனர். பின்னர் அந்த நிறுவனத்தின் வேலை செய்யும் பெண்களைக் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளரையும் கடத்திச் சென்றனர். அதோடு, அந்த நிறுவனத்தில் இருந்த கணினி போன்ற சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
