கோவையில் தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காட்டூர் சாலையில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜான் கோ பிடல். இவரை தொழில் விஷயமாக கரிகாலன் என்பவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தொழிலதிபர் பிடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இரண்டு கார்களில் வந்த கும்பல் அலுவலகத்தின் முன் உள்ள கண்ணாடி கதவை உடைத்தனர். பின்னர் அந்த நிறுவனத்தின் வேலை செய்யும் பெண்களைக் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளரையும் கடத்திச் சென்றனர். அதோடு, அந்த நிறுவனத்தில் இருந்த கணினி போன்ற சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...