ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா

கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 



நவீன மருத்துவத்தின் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுவது 'ஸ்டெம் செல்' தானமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தாத்ரி என்ற தொண்டு நிறுவனம், ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்ய முன்வருபவர்களைப் பதிவு செய்து வருகிறது. சுமார் 3,47,000 ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 393 பேர் தானம் செய்துள்ளனர்.



இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டனி ராபின்ஸ், சதீஷ் குமார் விஸ்வநாதன், ஏ.கண்ணன், வி. நந்தக்குமார், எம். சுப்ரமணி, எஸ். தாமோதரன் ஆகியோர் ரத்த ஸ்டெம் செல்களை தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ராமலிங்கம், தாத்ரி தொண்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரகு ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பாராட்டுக்களை தெரிவித்தனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...