கோவையில் வாசனை திரவிய தொழிற்சாலை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி, கரியன்குட்டை என்னுமிடத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ஹெக்சேன், அசிட்டோன், ஆல்கஹால், மெத்தனால், காஸ்மிக் அமிலம், போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் இப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, இத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் ஆணை நீர் ஆலையின் ரசாயன கழிவுநீரால் மாசடையும் என்ற புகார் எழுந்துள்ளது.

மேலும் தொழிற்சாலையை சுற்றியுள்ள நஞ்சனூர், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், கண்டியூர் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாகி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறும் இப்பகுதி விவசாயிகள் இத்தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்கின்றனர். 

பாதிப்புக்களைத் தடுக்க இந்த ரசாயன தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையினை முன்வைத்து இன்று இரு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத காரணத்தினால் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...