பொறியியல் கல்லூரிகளுக்குள் 'நீட்'டை புகுத்த முயற்சி: கோவையில் வைகோ பேட்டி

கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் திருச்சியில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கின்றது. உலக புகழ் பெற்ற மருத்துவர்கள் பலர் உள்ளூர் பள்ளியில் படித்தவர்கள் என்பதை நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுபவர்கள் உணர வேண்டும்.

மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை. இந்த தேர்வினை பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு வளரும் பிள்ளைகளின் கல்வியை, எதிர்காலத்தை பாதிக்கும். இதனால், மாணவர்கள் பலர் மனதுக்குள் நொந்து கொண்டு இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் என்பவர் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவிக்கின்றார். ஆலையை மூடுவதாக கூறுவது தமிழக அரசின் சதி நாடகம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

இதனால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கி விட வாய்ப்பு உள்ளது. சட்டசபையைக் கூட்டி, மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி, ஆலையை மூட சட்டம் கொண்டு வந்த பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அப்போது தான் மீண்டும் ஆலையைத் திறக்க முடியாது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகின்றோம் நாங்கள் சமூக விரோதிகளா? சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் சமூக விரோதிகளா? ஸ்டெர்லைட் எங்கு லைசென்ஸ் வாங்கினாலும், அதற்கு எதிராக போராடுவோம். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியை விட உக்கிரமான போராட்டம் தமிழகத்திலும் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...