வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்ட விவகாரம் : சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை ரூ. 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல, ஏராளமானோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த 2-ம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் வங்கி நிர்வாகத்தினர் மூடினர். தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 40,000 முதல் ரூ. 4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியைக் கொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...