பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி 3,000 கி.மீ., தூரம் பெண்ணின் இருசக்கர சாகச வாகனப் பயணம் : உதகையில் தொடக்கம்

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார். 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார். 

முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...