கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி கொலை : வார்டன்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை.



கோவை: மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கோவை மத்திய சிறையில் நேற்று கைதிகள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் நடந்த கொலை தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கைதியின் கொலை தொடர்பாக பணியின் போது அலட்சியமாக இருந்ததாக சிறை தலைமை வார்டன் முனுசாமி மற்றும் வார்டன் கருப்பசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசாரணை 

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதில் இறந்து போன கைதியின் உடலில் உள்ள மச்சங்கள், காயங்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 



மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருங்கல்லையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மத்திய சிறையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...