குற்றவாளிகளை பிடிக்க சென்ற கோவை போலீசுக்கு கத்திக் குத்து

கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.



கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது. 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை கே.ஜி.காலனியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பழனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க பழனி சென்றனர். 

அப்போது, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றனர். மேலும், போலீசாரை அவர்கள் கத்தியால் தாக்கினர். இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டுப்பட்டது.



இந்த நிலையில், அவருக்கு பழனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் ஆறுமுக நயினார்-ஐ இன்று மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி, காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளைப் பிடிப்பதில் துரிதமாக செயல்பட்ட தனிப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


Video: Laxman

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...