கல்விக் கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு மாணவன் வெளியேற்றம் : பள்ளியைக் கண்டித்து மாணவன் தந்தையுடன் தர்ணா

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய இலவச கல்விச் சட்டத்தின்கீழ் சேர்த்துள்ளார். இந்தாண்டு 1-ம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை இன்று பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டனம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளது. இதனையறிந்து கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவனும், அவனது தந்தையும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவன் காந்திஜி எழுது பலகையில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்ற வாசகத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, 'கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும். பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

திருப்பூரில் கட்டாய இலவச கல்விச்சட்டம் முறையாக தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறை கண்டு கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...