கோவையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சர்வீஸ் அபார்ட்மென்ட் உள்ளது. அங்கு வெங்கடேஷ் என்பவர் போக்கியத்திற்கு எடுத்திருந்த வீட்டில், தஸ்தகீர் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று காலை அவரிடம் வாடகை வசூலிப்பதற்காக வெங்கடேஷ் சென்றுள்ளார். ஆனால், அப்போது தஸ்தகீர் அங்கு இல்லை. மேலும், அங்கு கட்டு கட்டாக பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பழைய 1,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தஸ்தகீரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் தஸ்தகீர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் யார்? எதற்காக கோவை வந்தார்? பழைய ரூபாய் நோட்டுகள் யாருடையது? என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...