மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சிறுத்தைகளின் ஊடுருவலும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாறைப்பள்ளம், பனப்பாளையம், மேடூர், கண்டியூர் கிராமங்களில் கடந்த இரு மாத காலத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு ஆடுகளாகும். நள்ளிரவு நேரங்களில் ஆட்டுப்பட்டிக்குள் நுழையும் மர்ம விலங்கு அங்குள்ள ஆடுகளை மட்டும் குறி வைத்து தாக்கி கொன்று அதன் உறுப்புக்களை உண்டு விட்டு செல்கின்றன.

இதனால் அச்சத்தாலும், இழப்பாலும் தவித்த மக்கள் இது குறித்து தொடர்ந்து வனத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், நேற்றிரவு மீண்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சி மேடூர் கிராமத்தினுள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த நான்கு ஆடுகளை கடித்து கொன்றுள்ள நிகழ்வு இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், உடனடியாக வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள், இதனால் தாங்கள் தோட்ட வேலைக்கு செல்லவோ வெளியில் நடமாடவோ கூட அச்சப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, நிகழ்விடத்தினை ஆய்வு செய்த காரமடை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அந்த கிராமத்தில் நடமாடும் வனவிலங்கினை பிடிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...