அப்பா 'வாட்ச்-மேன்' மகள் 'டாக்டர்': கோவை மாநகராட்சி பள்ளி மாணவி 'நீட்' வெற்றி

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

சொக்கபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினரின் மகள் அழகுலட்சுமி. ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 1120 மதிப்பெண்கள் பெற்றார்.



கனவு

அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதினர். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்கவில்லை. மாறாக பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) தான் கிடைத்தது. ஆனால், அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. இதனால், அவர் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாரானார்.

அதன்படி, தேர்வை எழுதினார். இதில் அவருக்கு 316 மதிப்பெண்கள் கிடைத்தது. தற்போது பெற்றுள்ள மதிப்பெண் மூலம் அவருக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வாழ்வில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையில்லை என்பதையும், ஒடுக்குமுறைகளை ஒடுக்கி யாவராலும் மேலே எழ முடியும் என்பதையும் இந்த தேர்வின் மூலம் அழகுலட்சுமி நிரூபித்துள்ளார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...