லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியர் கைது

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35). அப்பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். அங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்துவதாக திட்டமிட்டு, கட்டிட வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.

வடக்கு மண்டல உதவி வருவாய் அதிகாரி காளம்மாள், பில் கலெக்டர் மாலா (50) ஆகியோர் வரி விதிப்பு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.

இது குறித்து சிவக்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கடந்த வாரம் (சனிக்கிழமை) லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வராததால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பில் கலெக்டர் மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்குப் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...