வெள்ளியங்காடு பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடுக்க கோரி பொதுமக்கள் மனு

கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஒன்றியதிற்கு உட்பட்ட வெள்ளியங்காடு கரியன்குட்டை பகுதியில் அரோமா பார்ம்ஸ் என்ற வாசனை திரவிய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இதனைத் தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடும் போது கோவை, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நீர் மாசு அடைவதுடன் குடிநீரை பருக முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆலை அமைக்கப்பட்டு வரும் பகுதி பாதுகாக்கப்பட்ட அத்திகடவு காப்புக் காடு பகுதி என்பதால் விலங்குகளின் வாழ்விடம் அழிந்து கேள்விக்குறி ஆகிவிடும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மர கொதிகலன் உபயோகிக்கும் பொழுது வெளியேறும் மாசு பொதுமக்களுக்கு நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் போது, வறட்சி காலம் மற்றும் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். எனவே, இந்த ஆலையைத் திறப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

என்று கூறப்பட்டிருந்தது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...