சிறுமியை கடத்த முயன்றதாகக் கூறி இளைஞரை கட்டி வைத்து அடித்த திருப்பூர் மக்கள்

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்புர் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார்,  உமா தம்பதியர். இவர்கள் இருவரும் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு உமா காட்டுப் பகுதிக்கு சென்றார். சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த இளைஞர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளார்.



இதனைக் கண்ட உமா கூச்சலிட்டதும், அந்த இளைஞர் சிறுமியை கிழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.



இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை மீட்டு மத்திய காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...