கள்ள நோட்டு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆனைகட்டியில் கைது

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை, வேலாண்டிபாளையம் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சாய்பாபா காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், அவரிடம் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்திடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர் சுந்தர் என்பவர் மூலம், வேலாண்டிபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒன்றரை மாதமாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான, 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ள சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சுந்தர் தான் தலைவர் என்றும், அவருக்கு கிதர் முகமது பக்கபலமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மூவருக்கும், சிறையில் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கிதர் முகமது மேல் ஏற்கெனவே பல்வேறு கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கு, சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை, தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைது

இந்நிலையில், கிதர் முகம்மது-வை ஆனைக்கட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சுந்தரைத் தேடி தனிப்படை போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...