தனியார் தொழிற்சாலையால் பாதிப்பு: கோவை மக்கள் ஆட்சியரிடம் புகார்

கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி ராஜகணபதி நகர், ரேவதி நகர், மற்றும் திருவள்ளுவர் நகர் அமைந்துள்ள பகுதியில் பி.சி அண்டு சன்ஸ் என்ற தனியார் பவுண்டரி செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகையுடன் கலந்து கருப்பு மண் வெளியேறுவதாக கூறப்படுகிறது.



அந்த மண் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுவாச கோளாறு, தோல் நோய், அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த பவுண்டரி குறித்து இதுவரை 11 துறைகளுக்கு மனு அளித்துள்ளோம். கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க பவுண்டரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை உறுதி செய்து விட்டுச் சென்றனர். இதன் பிறகும் அதை சரி செய்யும் முயற்சியில் பவுண்டரி நிர்வாகம் ஈடுபடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்திய பின்னர் பவுண்டரியை இயக்க அனுமதிக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...