கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா: கோவையில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.



தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர். 

இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.



கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. 

காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். 

காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...