திருப்பூரில் ஆயுதப்படை காவலரின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுப்பு: தற்கொலையா என போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருபவர் மோகன். இவர், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து மோகன் அலுவலகத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ரயில்வே போலீசாருக்கு காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது மோகன் என்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...