உதகை - கேத்தி இடையே இன்று முதல் வார இறுதிச் சுற்றுலா ரயில் இயக்கம்: முதல்நாளில் ரூ. 24,000 வசூல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உதகை - கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உதகை - கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 16-ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது. இந்நிலையில், சமீபத்தில் நீலகிரி மலை ரயிலை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்தா மற்றும் சேலம் கோட்ட மேலாளர் சுப்புராவ் ஆகியோர், ''நீலகிரியில் மீண்டும் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க முடிவு செய்யப்படும்,'' என, அறிவித்தனர்.



மேலும், உதகை - கேத்தி இடையே வார இறுதி நாட்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், வட்ட சுற்றுலா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இன்று முதல் இந்த ரயில் இயக்கப்பட்டது. இதில், 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரு இரண்டாம் வகுப்பு என 82 இருக்கைகளுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.



உதகையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை 3:00 மணிக்கு ரயில் சென்றடையும். மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு உதகைக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் வகுப்பிற்கு ரூ. 400-ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ. 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இந்தக் கட்டணத்தில் பயணி ஒருவருக்கு, 'சமோசா, வெஜிடேபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி, நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை' ஆகியவை வழங்கப்பட்டது. கிராம சுற்றுலாவை மேம்படுத்த இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்த அறிவிப்புக்கு, நீலகிரி மலை ரத அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜ் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சீசன் காலங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்திருந்தால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, முதல்நாளில் இந்த ரயிலில், 95.35 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். அதாவது, 86 இருக்கைகளில், 82 இருக்கைகள் நிரம்பின. இதன்மூலம், ரூ. 24,600 வசூலிக்கப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...