சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமம்பாளையம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்காமல் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 



மேலும், 2 மணி நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.​

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...