தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி: கோவையில் தமிழிசை பேட்டி

கோவை: ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி செய்ய இருப்பதாகக் கோவையில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி செய்ய இருப்பதாகக் கோவையில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சின்னியம்பாளையம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் பா.ஜ.க., அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்து போட்டுள்ளார். இதன்மூலம், 120 ஆண்டுகள் தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை, தீர்ப்பதற்கான ஆரம்பக்கட்டம் தொடங்கியுள்ளது.

எஸ்.வி.,சேகர் விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெரிதாகக் கட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில்லை. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும், அடிபணிய வைக்க வேண்டும். காவல்துறையில் பயங்கரவாதம் என்ற பொன். ராதாகிருஷ்ணனின் கருத்தை எச்சரிக்கையாக தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் இருக்கிறது. தீவிரவாதிகள் இல்லையெனில், நிரூபியுங்கள்.

தூத்துக்குடியில் மிக மோசமாக நடந்திருக்கக்கூடியது. ஆயிரம் உயிரிழப்பை 13 பேர் உயிரிழப்பு தாங்கியுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துக்களே பிரதமரின் கருத்தாகும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழுவை அழைத்து சென்று 3 நாட்கள் தூத்துக்குடியில் முகாம் அமைத்து களப்பணி செய்ய இருக்கிறோம், இவ்வாறு கூறினார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...