கிணற்றில் விழுந்த கறவை மாடு 2 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல, கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில், ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக உரிமையாளர் பாலசுப்ரமணித்திற்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.



அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கறவை மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 40 அடி ஆழம் என்பதால், மிரண்டிருந்த மாடு மிகவும் முரண்டு பிடித்தது. இதனால், மீட்டை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...