ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மாசனி (42) மின்சாரம் தாக்கி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க மின்வாரிய உயர் அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் உடுமலை அரசு மருத்துவமனையில் மாசானியின் உடலை வாங்க மறுத்து ஒப்பந்த ஊழியர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் நாகராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல், எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானார். அவரது உடலைப் பார்க்க கோவை மண்டத்திலிருந்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவராவது வரவேண்டும். மாசனியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உறுதி கொடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரியை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.



மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...