கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பேரூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் பூபதி என்பவரை மீன் மார்க்கெட் அருகில் வைத்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ஆகவே, குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பேரூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் பூபதி என்பவரை மீன் மார்க்கெட் அருகில் வைத்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ஆகவே, குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.