கோவையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பேரூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் பூபதி என்பவரை மீன் மார்க்கெட் அருகில் வைத்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ஆகவே, குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...