அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டுபிடிக்க, 'சூயஸ்' நிறுவனம் களஆய்வு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக, வீடு வீடாகச் சென்று குடிநீர் பயன்பாடு மற்றும் விநியோக அளவு பற்றிய தகவல்களை திரட்டும் பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகின்றது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், அணைகளில் இருந்து தற்போது பெறப்படும் குடிநீர் அளவு, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக இணைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் அளவுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்படுகின்றன. இதற்காக, மூன்று குழுக்கள் சூயஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வில், வீட்டின் உரிமையாளர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடிநீர் இணைப்பு எண், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது, குடியிருப்பு பகுதியின் மொத்த மக்கள் தொகை, வர்த்தக இணைப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதியப்படுகிறது.

குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று மொத்தம் இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளால் பல லிட்டர் குடிநீர் திருடப்படுகிறது.

இதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்யவும் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...